குலதெய்வம் கோவில் கனவில் வந்தால் என்ன பலன் ( kuladheivam kanavil vanthal enna palan ) - ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குல தெய்வங்கள் இருக்கும். பரம்பரை பரம்பரையாக பின்பற்றக்கூடிய மிகவும் முக்கியமானதாக இது உள்ளது. நமக்கு வீட்டில் ஏதாவது புதிய காரியங்கள் செய்ய வேண்டுமென்றால் அனைவரும் குல தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டிருப்போம். முக்கியமாக மொட்டை அடித்தல் மிகவும் விசேஷமாக ஒவ்வொரு குல தெய்வ கோவில்களில் மக்கள் காணிக்கையாக செலுத்துவார்கள்.
உங்கள் குலதெய்வம் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் காரியங்கள் சுமூகமாக முடியும் என்றும் ஏற்கனவே தொடங்கிய காரியங்கள் சிறப்பானதாகவும் நடைபெறும் என்றும் அர்த்தமாகும். தொழில் மற்றும் புதிய சுப காரியங்கள் துவங்கினால் அதனை சிறப்பானதாக மாறும் என்பதை உணர்த்துகிறது.
வாழை மரம் கனவில் வந்தால் என்ன பலன்