நில ஆவணம் காணாமல் போன ஆன்லைன் புகார் - ஒரு சொத்தினை பாதுகாக்க நாம் எப்படி முயற்சி செய்கிறோமோ அதேபோல் தான் சொத்தின் ஆவணத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். ஒரு சில நேரத்தில் முக்கிய ஆவணங்களாக கருதப்படுகின்ற சொத்தின் அசல் பத்திரங்கள் தொலைந்து விட்டால் பரிவர்த்தனை என்பது கஷ்டமே.
அப்படி உங்கள் பத்திரம் தொலைந்து போனால் அருகில் உள்ள காவல் நிலையமோ அல்லது ஆன்லைனிலோ புகார் அளிக்கலாம். அதற்கு சில முக்கிய ஆவணங்களாக கருதப்படுகின்ற சொத்தின் நகல், சமீபத்திய புகைப்படம், 20 வருடத்திற்கான வில்லங்க சான்று, செய்தி வெளியீடு, உரிமையாளர் இல்லை என்றால் வாரிசு சான்றிதழ், ஒன்றிற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால் அவர்களிடமிருந்து ஆட்சேபனையில்லை என ஒரு சான்று என இவ்வளவு ப்ரூப் கொடுக்க வேண்டும்.
பிறகு சி எஸ் ஆர் காபி ஒன்றை கொடுப்பார்கள். அதனை கண்டுபிடிக்க முடியவில்லை எனில் Non traceable certificate ஒன்றை கொடுப்பார்கள். அதனை வைத்து பரிவர்த்தனை நடத்தி கொள்ளலாம் அல்லது பதிவு அலுவலகத்தில் சென்று இரண்டாம் காபி வாங்கி கொள்ளலாம்.