சொத்து விவரம் ( sothu vivaram in tamil ) - பதிவுத்துறை சார்ந்த பத்திரங்களில் சொத்தின் விவரம் அப்டேட் செய்யப்படுவது வழக்கம். ஏனெனில் ஒரு சொத்தினை பற்றி வாங்கும் நபர் அறிய வேண்டுமென்பதற்காகவே இந்த முறையை ஒவ்வொரு பத்திர எழுத்தரும் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.
வருவாய் துறையில் கொடுக்கப்படும் பட்டாக்களில் நில தன்மை, வகை , இடத்தின் அளவு, தீர்வை மட்டுமே இருக்கும். ஆனால் அதன் முழு விவரங்கள் அப்டேட் செய்யப்படாது. ஏனெனில் ஒரு நிலத்தின் உரிமையாளர் என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணமாக தான் பட்டா இருக்கும்.
பத்திரங்களில் இரண்டாம், மூன்றாம் அல்லது கடைசி பக்கத்தில் சொத்தின் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். அதில் பழைய சர்வே எண், புதிய சர்வே எண்கள் , உட்பிரிவு செய்யப்பட்டிருந்தால் அந்த எண், எவ்வளவு இடம் சென்ட் கணக்கு, அரசு மதிப்பு மற்றும் எழுதி கொடுப்பவர் புகைப்படம், முகவரி, எழுதி வாங்குபவர் முகவரி, புகைப்படம் மற்றும் சாட்சிகள் எழுதப்பட்டிருக்கும்.